Tuesday, June 26, 2007

காதல் 6


என்னுள் ஒழிந்திருந்த உன்னை

நான் எப்போதே கண்டுபிடித்து விட்டேன்

ஆனால் உன்னில் ஒழிந்திருக்கும் என்னை

ஏன் இன்னும் நீ உணராமல் இருக்கிறாய் ?

என்னை விடவும் உன்னைப் பற்றித்தான்

நான் அதிகமாக யோசிக்கிறேன் !!

எனக்கு பயமாக இருக்கிறது !!

ஒருவேளை நான் உன்னைப் பற்றியே நினைத்து

என்னை மறந்து விடுவேனோ என்று ?

தயவு செய்து என்னைக் கொடுத்து

உன்னைப் பெற்றுக் கொள் !!

அல்லது என்னையாவது உன்னுள்

தேடி கண்டுபிடித்து விடு !!

முடிவை சீக்கிரம் எடு !! இல்லையேல்

முடிவே முடிவாகிவிடும் நம் என் காதலுக்கு !!!

1 comment: